Sep 2, 2014

ஒரு கொலை


   உன்னைக் கொல்ல வேண்டும். அடித்தே கொன்றால் தான் என் மனம் ஆறும். எத்தனை நேரம் தவித்திருப்பேன் உன்னால். கனவில் கூட அவளை நெருங்க விடவில்லை நீ. எங்கே நீ இருந்தாலும் உன்னைக் கொன்றே  ஆகா வேண்டும். 

   இன்றைக்கு ஒரு முடிவு தெரியாமல் உறங்கப் போவதில்லை நான். இங்கே தான் எங்கோ இருக்கிறாய். எனக்கு தெரியாமல் இல்லை. உன்னைக் நான் கண்ட மறு நொடி, எழுதி வைத்துக் கொள், உன் மரணம் என்று. 

   எத்தனை நாளைக்கு பிறகு அவளை பார்த்தேன். தெரியுமா உனக்கு? நீ எல்லாம் ஒரு ஜென்மம். ச்சை!!! இதோ பார்த்துவிட்டேன் உன்னை. என் கையால் தான் சாவு உனக்கு. "படார்". செத்தாயா. சொன்னேனா. எத்தனை ரத்தம். பார். என் கையில் ரத்தம். எல்லாம் உன்னால் தான். உன் ரத்தத்தை துடைத்தெரிய வேண்டும். "சர்ரக்" துடைத்தெரிந்து விட்டேன். "வா அனுஷ்கா நாம டூயட்ட கன்டினியு பண்ணுவோம். அந்த கொசுவ அடுச்சுட்டேன்" போர்வை மூடி கனவு காணத் தயாரானேன். 

1 comment: