Aug 17, 2014

வாலி-பண் வாலிபன்


படம் - வில்லுப்பாட்டுக்காரன் (1992)
இசை - இளையராஜா
பாடலாசிரியர் - கவிஞர் வாலி
பாடியவர் - மலேசிய வாசுதேவன்

மூன்று தலைமுறை பாடலாசிரியர் கவிஞர் வாலி. புதுமையாக எழுதக் கூடியவர். அவர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. வித்தியாசமான பாடல் இது. படித்துப் பாருங்களேன்.

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஏழைகள் காதுகளில்
செந்தேனள்ளி சேர்க்குற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி
எடுத்து தர ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க அணை எடுக்க
நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்ல தாண்டுற சீண்டுற ஏண்டி நீ அளக்குற

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

நீ இங்கு கேட்டதில்ல
அந்நாளிலே கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தாரடி என் எஸ் கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்கிற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளைய கிளி
இன்று எதிர் நின்று
இந்த காலையை கங்கையில்
கால் கைகள் நடுங்குது

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி


இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பு பலருக்கும் தெரியாதது. உங்களுக்கு தெரியும் என்றால் மகிழ்ச்சியே. தெரியாதவர்கள் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால் அடுத்த வரியை படிக்கவும்.

இது ஒரு 'உதடு ஒட்டாத' பாடல். அதாவது '' '' தமிழ் எழுத்துக்கள் இந்த பாடலில் இல்லை. ஆச்சரியமாக இருக்கிறதா... மீண்டும் இந்த பாடலை படித்து பார்க்க வேண்டும் என்று தோன்றுமே... நிற்க...

இந்த பாடலில் '' எழுத்தும் பயன்படுத்தப் படவில்லை. அந்த வகையில்  இது 'உதடு கடிக்காத' பாடலும் கூட.


ஆங்கில வார்த்தைகளும் அர்த்தமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தும் கவிஞராக அவ்வப்போது விமர்சிக்கப் படும் வாலியின் சிறந்த படைப்புகளுக்கு இந்த பாடல் ஒரு சோறு பதம்.

No comments:

Post a Comment