Aug 13, 2014

சுற்றுச்சூழல் கவிதைகள்


நெகிழிப் பைக்குள்
அடைப்பட்டுகிடக்கும் உலகத்தின்
சுவாசம்

==============================================================================

எதுவும் மக்கும் மண்ணில்
மண்ணே மக்கும் என்னில்
நெகிழி!!!

==============================================================================

குறிஞ்சியை பெயர்த்து கோபுரங்கள் செய்
முல்லையை அழித்து மாளிகை செய்
மருதத்தை கருக்கி தொழிற்கூடம் செய்
நெய்தலில் கழிவுகள் மூழ்கச் செய்
பாலையில் உனக்காக நீயே ஒரு கல்லறையும் செய்

==============================================================================

இரத்தம் நிறமற்றது!!!
ஆம்!!! பூமியின் இரத்தம் நிறமற்றது
அது மழை நீர்

==============================================================================

எங்கிருந்து பெறப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்படுகிறது
மழைநீர் அறுவடை செய்

No comments:

Post a Comment