Sep 2, 2014

ஒரு கொலை


   உன்னைக் கொல்ல வேண்டும். அடித்தே கொன்றால் தான் என் மனம் ஆறும். எத்தனை நேரம் தவித்திருப்பேன் உன்னால். கனவில் கூட அவளை நெருங்க விடவில்லை நீ. எங்கே நீ இருந்தாலும் உன்னைக் கொன்றே  ஆகா வேண்டும். 

   இன்றைக்கு ஒரு முடிவு தெரியாமல் உறங்கப் போவதில்லை நான். இங்கே தான் எங்கோ இருக்கிறாய். எனக்கு தெரியாமல் இல்லை. உன்னைக் நான் கண்ட மறு நொடி, எழுதி வைத்துக் கொள், உன் மரணம் என்று. 

   எத்தனை நாளைக்கு பிறகு அவளை பார்த்தேன். தெரியுமா உனக்கு? நீ எல்லாம் ஒரு ஜென்மம். ச்சை!!! இதோ பார்த்துவிட்டேன் உன்னை. என் கையால் தான் சாவு உனக்கு. "படார்". செத்தாயா. சொன்னேனா. எத்தனை ரத்தம். பார். என் கையில் ரத்தம். எல்லாம் உன்னால் தான். உன் ரத்தத்தை துடைத்தெரிய வேண்டும். "சர்ரக்" துடைத்தெரிந்து விட்டேன். "வா அனுஷ்கா நாம டூயட்ட கன்டினியு பண்ணுவோம். அந்த கொசுவ அடுச்சுட்டேன்" போர்வை மூடி கனவு காணத் தயாரானேன். 

Aug 17, 2014

வாலி-பண் வாலிபன்


படம் - வில்லுப்பாட்டுக்காரன் (1992)
இசை - இளையராஜா
பாடலாசிரியர் - கவிஞர் வாலி
பாடியவர் - மலேசிய வாசுதேவன்

மூன்று தலைமுறை பாடலாசிரியர் கவிஞர் வாலி. புதுமையாக எழுதக் கூடியவர். அவர் எழுதிய பாடல்களில் இதுவும் ஒன்று. வித்தியாசமான பாடல் இது. படித்துப் பாருங்களேன்.

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஏழைகள் காதுகளில்
செந்தேனள்ளி சேர்க்குற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி
நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி
எடுத்து தர ஆயிரம் கீர்த்தனைதான்
அலை அடிக்க அதை தடுக்க அணை எடுக்க
நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்ல தாண்டுற சீண்டுற ஏண்டி நீ அளக்குற

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி

நீ இங்கு கேட்டதில்ல
அந்நாளிலே கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தாரடி என் எஸ் கே தன் கருத்தை
தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்கிற ஜாதியடி
எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளைய கிளி
இன்று எதிர் நின்று
இந்த காலையை கங்கையில்
கால் கைகள் நடுங்குது

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேன் அடியே

ஆனந்த ராகங்களை கிளியே இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே எங்கிட்ட ஏதுக்கடி


இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பு பலருக்கும் தெரியாதது. உங்களுக்கு தெரியும் என்றால் மகிழ்ச்சியே. தெரியாதவர்கள் பாடலை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். அப்படியும் தெரியவில்லை என்றால் அடுத்த வரியை படிக்கவும்.

இது ஒரு 'உதடு ஒட்டாத' பாடல். அதாவது '' '' தமிழ் எழுத்துக்கள் இந்த பாடலில் இல்லை. ஆச்சரியமாக இருக்கிறதா... மீண்டும் இந்த பாடலை படித்து பார்க்க வேண்டும் என்று தோன்றுமே... நிற்க...

இந்த பாடலில் '' எழுத்தும் பயன்படுத்தப் படவில்லை. அந்த வகையில்  இது 'உதடு கடிக்காத' பாடலும் கூட.


ஆங்கில வார்த்தைகளும் அர்த்தமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தும் கவிஞராக அவ்வப்போது விமர்சிக்கப் படும் வாலியின் சிறந்த படைப்புகளுக்கு இந்த பாடல் ஒரு சோறு பதம்.

Aug 16, 2014

அஞ்சான் - விமர்சனம்

முன் குறிப்பு - விமர்சனம் படித்துவிட்டு படம் பார்ப்பவன் நான். படம் பார்த்து கதை கூட சொல்ல வராது எனக்கு. திரைப்பட விமர்சனம் எழுதும் அளவுக்கு ஞானமும் இல்லை என்பதால் எனக்கு தெரிந்த அளவில் எழுத முயல்கிறேன்.

கதை - நண்பனை கொன்ற வில்லனையும், துணை இருந்த துரோகிகளையும் பழி வாங்கும் கதை. அதற்கு தாதாக்கள் பின்னணி சேர்த்திருக்கிறார்கள்.

தாதா படம். ஆனால் அந்த mood படத்தில் இல்லவே இல்லை.  சூர்யா வித்யுத் நட்பை வார்த்தைகள் கொண்டு ஆழம் சேர்க்க முயன்றிருக்கிறார்கள். சூர்யா சமந்தா காதலில் ஆழம் இல்லை. சூர்யா சமந்தா சூரி தவிர மற்றவர் வாய்சுக்கும் வாயசைப்புக்கும் சம்மந்தமில்லாமல் இருப்பதால் கொரியன் நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது.

அஞ்சானில் என்ன செய்கிறார்கள் இவர்கள்:

சூர்யா - அடிக்கிறார், அடிக்கிறார், அடிச்சுகிட்டே இருக்கார். இதில் (ஆ)ரம்ப பில்டப்புகள் வேறு. நடிப்பில் குறையில்லை. அவரது கணக்கில் இன்னொரு படம்.

சமந்தா - இரண்டாம் பாதியில் முழுக்க போர்த்திக் கொண்டு வருகிறார், முதல் பாதியில் காற்றோட்டமான உடையில் வருகிறார், பாடல்களில் தாராளமாக வருகிறார் (பிகினி நடையும் உண்டு), மற்றபடி வண்டிக்கு பின்னால் ஓடி வருகிறார்.

வித்யுத் ஜாம்வால் - Second Hero கதாபாத்திரம்(பெயரளவில்). சொன்னதை செய்திருக்கிறார். நல்ல கலைஞனை வீணடித்திருக்கிறார்கள். இவர் வரும் சண்டை காட்சி மட்டுமே படத்தில் ஈர்க்கிறது. மனுஷன் செம்ம speed.

மனோஜ் பாஜ்பாய் - கச்சித வில்லன். நடிப்பில் கெட்டி.

சூரி, பிரம்மானந்தம் - சிரிப்பு சுத்தமா வரல.

Oneline - கதை ஓ.கே என்றாலும், திரைக்கதை சுத்தமாக சொதப்பியதால் அஞ்சான் நோஞ்சான்.

Aug 13, 2014

சுற்றுச்சூழல் கவிதைகள்


நெகிழிப் பைக்குள்
அடைப்பட்டுகிடக்கும் உலகத்தின்
சுவாசம்

==============================================================================

எதுவும் மக்கும் மண்ணில்
மண்ணே மக்கும் என்னில்
நெகிழி!!!

==============================================================================

குறிஞ்சியை பெயர்த்து கோபுரங்கள் செய்
முல்லையை அழித்து மாளிகை செய்
மருதத்தை கருக்கி தொழிற்கூடம் செய்
நெய்தலில் கழிவுகள் மூழ்கச் செய்
பாலையில் உனக்காக நீயே ஒரு கல்லறையும் செய்

==============================================================================

இரத்தம் நிறமற்றது!!!
ஆம்!!! பூமியின் இரத்தம் நிறமற்றது
அது மழை நீர்

==============================================================================

எங்கிருந்து பெறப்பட்டதோ
அங்கேயே கொடுக்கப்படுகிறது
மழைநீர் அறுவடை செய்

Apr 29, 2014

தலைப்பூ


இந்த பதிப்பு யார் மனதையும் புண்படுத்தவோ அரசியல் பேசவோ தனி மனிதரை விமர்சனம் செய்யவோ பதியப்படவில்லை.

Only for fun... Enjoy...








நன்றி,
செ.வினோத்

Apr 25, 2014

Cross Word



Across

1, 8
Captain of Indian cricket team for Asia Cup ’14 (5,5)
2
Measure of farm land in general (4)
3
Cuddle food & beverage Co. (6)
4
Not transparent (6)
5
Sheet or paper that shows border details of countries (3)
6
The Road Not Taken poet (6,5)
7
As Soon As Possible shortly (4)
9
White of the egg (7)
10
Occupied taxi recruited (5)
11
Song in Praise of God (4)

Down
2
Entertaining sound (5)
5
Chinese communist leader first name (3)
7
Eat in past (3)
12
One among the three girls of Tell Me Your Dreams (6)
13
Ten amperes (5)
14
Ensure safety itself having cure (6)
15
The City of Light (5)
16
Much!!! Much!!! (3,4)
17
Unit of heat usually British (5)
18
Get the boy from the lady (3)
19
Woman in service of God (3)


Mar 22, 2014

Bachelors

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

உறங்கச்சென்றவன் எழுந்திருந்தான், பணிக்குச் சென்றவன் திரும்பியிருந்தான்.

"நான்போய் தூங்குறேன். Tired- இருக்கு"

"சரி"

"சாப்டுக்கோ"

"சரி"

"சாப்பாடுசெஞ்சுட்டேன். Table-  இருக்கு"

"சரி"

"நான்வேலைக்கு கிளம்புறேன்"

=======================================================================

மாலை மாற்று (palindrome) பற்றி இணையத்தில் துளாவியபோது திருஞானசம்பந்தர் எழுதிய மாலை மாற்றுபாடலை படித்துத் துணுக்குற்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகஎழுதியது தான் இந்த bachelors [தலைப்புஉபயம் - மனைவி] line palindrome கதை. இது சிறு முயற்சி.

மாலை மாற்று பற்றி தெரியாதவர்களுக்கு- எந்த திசையிலிருந்து வாசித்தாலும் ஒரே மாதிரி இருக்கும்சொல் அல்லது சொற்றொடர் மாலைமாற்று எனப்படும்.

உம்: விகடகவி; மாடு ஓடுமா

திருஞானசம்பந்தர்எழுதிய படலை படிக்க கீழிருக்கும்முகவரியை சொடுக்கவும்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm


நன்றி,
வினோத்

Mar 8, 2014

பாலா - I

இரண்டாயிரமாம் வருட ஆரம்பத்தின் ஒரு நாள். வழக்கம் போல் நண்பன் அரவிந்த் வீட்டில் நான், அரவிந்த், பாலா, ஜெய்நுல் அனைவரும் கதை பேசிக் கொண்டிருந்தோம்.

அரவிந்த், "இந்த படம் பாத்துட்டியா?" C.D கவர் ஒன்றை நீட்டி கேட்டான்

நான், "இன்னும் இல்ல"

அரவிந்த் வீட்டு கம்ப்யூட்டர் ரூமில் அந்த படத்தைப் பார்க்கக்  கூடினோம். கூட்டத்தில் அந்த படத்தை பார்க்காத ஒரே பிரகஸ்பதியாக நான் இருக்க, 'சூப்பர் படம் டா', 'செம்ம டச்சிங்', 'பிண்ணிட்டான்' என்று அவனவன் படத்தின் பெருமை பேசிக் கொண்டிருந்தான்.

எரிச்சலில் அலட்சியமாக நான், "ஹீரோயின் செத்துடுவா! ஹீரோ லூசாயிடுவான்! அவ்ளோதானே டா" என்றேன்

"படம் பாத்துட்டு பேசுடா வெண்ண" என்றே பதில் வந்தது

என் நேரமோ என்னவோ தெரியவில்லை படத்தின் மூன்று V.C.D-ல் இரண்டாம் C.D மட்டுமே கிடைக்க வேறு வழியில்லாமல் நாயகன் நாயகியிடம் காதலைச் சொல்லும் கட்டத்திலிருந்து தான் படம் பார்க்க ஆரம்பிதேன் (கடைசி ரீலில் காதலைச் சொல்லும் படத்திற்கு இது தேவலை என்று தோன்றியது). படம் ஓட ஓட படத்தோடு நானும் ஐக்கியமாகிப் போனேன். பாட்டு, சண்டை, இடைவேளை, நண்பர்கள் கேலி, நாயகியின்  கோபம், நாயகியை கடத்திச் சென்று தன் காதலை உருகி உருகிச் சொல்லும் நாயகன், ஒரு கும்பல் நாயகனை அடித்து அவன் தலையை பாறையில் முட்டி வீசி எறிவது என்று அந்த பாகம் முடிந்தது.

திரும்பி வீட்டுக்கு வந்த பிறகும் அதே நினைவு. இரவு உணவு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. மனம் முழுக்க அதே காட்சிகள் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல ஒரு வாரம் வரை அந்தத் திரைப்படம் என் தூக்கத்தை களவாடியிருந்தது. அப்போது என் மனதில் உதித்த ஒரே கேள்வி

"யார்ரா இந்த பாலா?"

பிறகு ஒரு வழியாக அந்தத் திரைப்படத்தை முழுமையாக பார்த்து, ஆனந்த விகடனில் விமர்சனம் படித்து (50/100 மதிப்பெண்) மகிழ்ந்து போனேன். இயக்குனர் பாலாவை எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

அது நாள் வரை ஹீரோ மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு முக்கியம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு பாலாவின் படம் திரையுலகம் பற்றிய என் எண்ணத்தை மாற்றியது. எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று ஹீரோக்கள் படம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு முதன் முதலில் இயக்குனர் படம் காட்டியது 'சேது'


பெரிய ஹீரோ இல்லை, பிரபலமான நடிகர் நடிகைகள் (நடிகர் சிவகுமார் தவிர) இல்லை, கவர்ச்சி நடனம் இல்லை, பஞ்ச் டையலாக் இல்லை, பிரதான வில்லன் இல்லை இப்படி இன்னும் சில இல்லைகள். ஆனாலும் சேது வென்றான். Rest is History.




இது நடந்து சில நாட்களுக்கு பிறகு பாலாவின் பேட்டி ஒரு வார இதழில் வெளியாகி இருந்தது. என்னால் என்றும் மறக்க முடியாத பாலாவின் பதில் ஒன்று

கேள்வி: உங்க முதல் படத்துக்கும் இரண்டாம் படத்துக்கும் நடுவுல ஏன் இவ்வளவு இடைவெளி?


பாலா பதில்: வேடிக்கையா சொல்லனும்னா என்னோட முதல் படமே முப்பதோரு வருஷம் கழிச்சுத் தான் எடுத்திருக்கேன்.

Mar 5, 2014

நட்பு

தங்கையின் திருமணம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தான் ஆனந்த். உறவினர் கூட்டம் நண்பர்கள் வட்டம் என எங்கும் ஒரே மகிழ்ச்சி வெள்ளம். அனைவரையும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர். அப்போதுதான் வந்தான் செந்தில், ஆனந்தின் பள்ளி நண்பன், ஆனந்திற்கு பரிட்சியம் இல்லாத இன்னொரு நபருடன்.

"இவன் பிரபு... என் காலேஜ் ஃப்ரென்டு..." ஆனந்துக்கும் அவன்  தாய் தந்தைக்கும் தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான் செந்தில்.

பிரபு, "ஹலோ"

"வாங்க... முதல்ல சாப்டுங்க..." என்று இருவரையும் அழைத்துச்  சென்று காலை பந்தியில் அமர வைத்தான் ஆனந்த். இருவரையும் நல்லபடியாக கவனித்துக் கொண்டான். வேண்டியது எல்லாம் எடுத்து வரச் செய்தான். செந்திலை கவனித்தான் என்றாலும் பிரபுவை கொஞ்சம் அதிகமாகவே கவனித்தான். முகூர்த்தம் வந்தது. தாலி கட்டியாயிற்று. திருமணம் முடிந்தது. மதிய உணவுக்கும் பிரபுவுக்கு அதிக கவனிப்புதான்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தின் தந்தை பசுபதிக்கு குழப்பம் கலந்த ஆச்சரியம்.

மகனை தனியாக அழைத்து "அவன் உன்னோட நெருங்குன தோஸ்தா என்ன? ஓசில சாப்ட வந்தவன இப்படியெல்லாம் கவனிக்கணுமா?" கடிந்து கொண்டார்.

"அப்படி சொல்லாதிங்கப்பா. அவன் இங்க என் ஃப்ரென்ட நம்பி வந்திருக்கான். அவன நான் நல்லபடியா கவனிக்கிறது என் நண்பனுக்கும் எங்க நட்புக்கும் நான் கொடுக்குற மரியாதை"


"என்னமோ போ" என்று சலித்துக் கொண்டே பசுபதி நகர, பந்தியில் பிரபுவிடம் செந்தில் கிசுகிசுப்பாக "நான் சொல்லல. செமையா  கவனிப்பான்னு. இவன நம்பி இன்னும் ஒரு பத்து பேர கூட்டிட்டு வரலாம். சரியான இளிச்சவாயன்" என்றான் எள்ளலாக.

Feb 28, 2014

தழுவிய கவிதை

நான் எழுதும் கவிதைகளை
தழுவல் என்கிறாய்

உண்மை தான்...

நான் கவிதைகள் எழுதியது
உன்னைத் தழுவிய பின் தானே!!!

==================================================================

உன்னைத் தழுவுவதும்
ஒரு வகை கவிதையே